search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிய கணவன் கைது

    ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள கண்ணங்குடி கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவரது மனைவி குமுதவல்லி (48). இருவரும் கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சியில் உள்ள குமுதவல்லியின் தாயார் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதன் பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் கண்ணன் தென்னை தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தபோது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் குமுதவல்லியை சரமாரியாக வெட்டினார்

    அருகில் இருந்த அவரது மகன் தடுக்க வந்தபோது உன்னையும் வெட்டி விடுவேன் என மிரட்டியதால் அவர் ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    இதுகுறித்து குமுதவல்லி மகன் சந்தோஷ் (20), கொடுத்த புகாரின் ஒரத்தநாடு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில்பிரேம்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×