என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்11 Sep 2021 10:39 AM GMT (Updated: 11 Sep 2021 10:39 AM GMT)
கோவையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:
கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (34). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் கார்த்தி தனக்கு திருணம் செய்து வைக்க பெற்றோரிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் பெண் பார்க்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி சூளேஸ்வரன பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர ராமேஷ்வரன் (வயது 24). இவர் பி.டேக் படித்து விட்டு கடந்த 2 வருடங்களாக வேலை தேடி வந்தார்.
ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரமடையை சேர்ந்த 51 வயது பெண் கடந்த 8 வருடங்களாக பாலின நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (34). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் கார்த்தி தனக்கு திருணம் செய்து வைக்க பெற்றோரிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் பெண் பார்க்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி சூளேஸ்வரன பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர ராமேஷ்வரன் (வயது 24). இவர் பி.டேக் படித்து விட்டு கடந்த 2 வருடங்களாக வேலை தேடி வந்தார்.
ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரமடையை சேர்ந்த 51 வயது பெண் கடந்த 8 வருடங்களாக பாலின நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X