search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
    Next Story
    ×