search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காலாவதியான மதுபானங்கள் விற்பனை-மதுபிரியர்கள் புகார்

    உணவுப்பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி எந்த உணவுப்பொருள் ஆனாலும் அதில் காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே  காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் காலாவதியான மதுபானங்கள்  விற்பனை செய்யப்படுவதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், 

    நான் மது வாங்கியபோது அதில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படவில்லை,  மதுபான விற்பனையாளரிடம் கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். கொரோனா காலத்தில்  விற்பனையாகாமல் இருந்த பழைய மதுபானங்களை  தற்போது   விற்பனை செய்கிறார்களோ   என்ற அச்சம்   ஏற்படுகிறது  என்றார்.

    இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலரிடம் கேட்டபோது, உணவுப்பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி எந்த உணவுப்பொருள் ஆனாலும் அதில் காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.

    இதேபோல மதுபான பாட்டில்களிலும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பாட்டிலில் ஏதாவது ஒரு இடத்தில் காலாவதி தேதி குறிப்பிட்டு இருக்கும். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
    Next Story
    ×