என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாக மாறி 24 மணிநேரமும் செயல்படுகிறார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
Byமாலை மலர்11 Sep 2021 7:21 AM GMT (Updated: 11 Sep 2021 7:21 AM GMT)
இந்து அறநிலையத்துறை என்பது கொடுத்துவைத்த துறையாக அமைச்சர் சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் செயல்பாடுகளை பாராட்டி புகழாரம் சூட்டினார். மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்று அழைக்க வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருக்கிறேன். அந்த பெயருக்கு முழு தகுதி படைத்தவராக அவர் விளங்கிக்கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்திருக்கிறது.
சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. இன்னும் சட்டமன்ற கூட்டத்தொடர் முடியவும் இல்லை. 13-ந்தேதி தான் முடியப் போகிறது. அறிவித்து ஒரு வாரத்துக்குள் சட்டமன்றம் முடியும் முன்பே திட்டம் செயல்படுகிறது என்றால் அது சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த திட்டம் தான்.
நாம் அடிக்கடி சொல்வோம் எள் என்றால் எண்ணையாக நிற்பார் என்று. ஆனால் சேகர்பாபுவை பொறுத்தவரை எள் என்று சொல்ல வேண்டியதில்லை. எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக நிற்க கூடியவர்.
இங்கு அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். இந்து அறநிலையத்துறை என்பது கொடுத்துவைத்த துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது.
24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு அமைச்சராக சேகர்பாபு விளங்கிக்கொண்டு இருக்கிறார். நீங்களே தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகைகளில் படிக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் செயல்பாடுகளை பாராட்டி புகழாரம் சூட்டினார். மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர் எப்படியெல்லாம் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்று அழைக்க வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருக்கிறேன். அந்த பெயருக்கு முழு தகுதி படைத்தவராக அவர் விளங்கிக்கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்திருக்கிறது.
சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. இன்னும் சட்டமன்ற கூட்டத்தொடர் முடியவும் இல்லை. 13-ந்தேதி தான் முடியப் போகிறது. அறிவித்து ஒரு வாரத்துக்குள் சட்டமன்றம் முடியும் முன்பே திட்டம் செயல்படுகிறது என்றால் அது சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த திட்டம் தான்.
நாம் அடிக்கடி சொல்வோம் எள் என்றால் எண்ணையாக நிற்பார் என்று. ஆனால் சேகர்பாபுவை பொறுத்தவரை எள் என்று சொல்ல வேண்டியதில்லை. எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக நிற்க கூடியவர்.
இங்கு அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன் இருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். இந்து அறநிலையத்துறை என்பது கொடுத்துவைத்த துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது.
24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு அமைச்சராக சேகர்பாபு விளங்கிக்கொண்டு இருக்கிறார். நீங்களே தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகைகளில் படிக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X