என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் செய்வதாக ஏமாற்றி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
Byமாலை மலர்9 Sep 2021 10:23 AM GMT (Updated: 9 Sep 2021 10:23 AM GMT)
மதுரையில் திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை உலகநேரியை சேர்ந்தவர் சிவா (வயது 29). இவர் அங்குள்ள பழத்தோட்டத்தில் ஊழியராக உள்ளார். சிவாவுக்கும், அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் பேசி பழகி வந்தனர்.
சம்பவத்தன்று சிவா அந்த மாணவியை பழத்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். மாணவியிடம் அத்துமீறும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். “உன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சிவா வாக்குறுதி கொடுத்தார். இதனை அந்த சிறுமி நம்பி விட்டார்.
அதன் பிறகு அவர் அந்த சிறுமியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி வற்புறுத்தியுள்ளார். சிவா திருமணத்திற்கு தாமதப்படுத்தியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் சிவாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை உலகநேரியை சேர்ந்தவர் சிவா (வயது 29). இவர் அங்குள்ள பழத்தோட்டத்தில் ஊழியராக உள்ளார். சிவாவுக்கும், அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் பேசி பழகி வந்தனர்.
சம்பவத்தன்று சிவா அந்த மாணவியை பழத்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். மாணவியிடம் அத்துமீறும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். “உன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சிவா வாக்குறுதி கொடுத்தார். இதனை அந்த சிறுமி நம்பி விட்டார்.
அதன் பிறகு அவர் அந்த சிறுமியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி வற்புறுத்தியுள்ளார். சிவா திருமணத்திற்கு தாமதப்படுத்தியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் சிவாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X