என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேர் கைது
Byமாலை மலர்9 Sep 2021 10:19 AM GMT (Updated: 9 Sep 2021 10:19 AM GMT)
மதுபோதை தகராறில் விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த வடமாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென இரும்பு கம்பியால் அவர்களை தாக்கியதோடு, 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில் கோட்டார் பெரியவிளையை சேர்ந்த ராஜா என்ற வடிவேல் (47), இறச்சகுளம் பேச்சான்குளத்தை சேர்ந்த அஜித் (28) மற்றும் முளகுமூடு பறைக்கோட்டை சேர்ந்த ஜோஸ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த வடமாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அந்த கும்பல் திடீரென இரும்பு கம்பியால் அவர்களை தாக்கியதோடு, 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின்பேரில் கோட்டார் பெரியவிளையை சேர்ந்த ராஜா என்ற வடிவேல் (47), இறச்சகுளம் பேச்சான்குளத்தை சேர்ந்த அஜித் (28) மற்றும் முளகுமூடு பறைக்கோட்டை சேர்ந்த ஜோஸ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X