search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த கணவன் - மனைவி குண்டர் சட்டத்தில் கைது

    இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆயுர் வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் அதிரடி சோததனை நடத்தினர். 

    இந்த சோதனையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் ராஜேஷ், அவரது மனைவி ஜோதி ரெட்டி ஆகியோரை கைது செய்தனர். 

    பின்னர் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். 

    அதன்அடிப்படையில் கோவை சிறையில் இருக்கம் இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வழங்கினர்.
    Next Story
    ×