என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
Byமாலை மலர்8 Sep 2021 6:11 AM GMT (Updated: 8 Sep 2021 6:59 AM GMT)
சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமியை முழுமையாக பேச அனுமதி கொடுக்காததால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச முற்பட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் திடீரென இப்படி பேசினால் அமைச்சரால் பதில் கொடுக்க இயலாது. நீங்கள் நாளை பேசலாம். அனுமதி தருகிறேன் என்றார்.
ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து விளக்கம் அளித்தார்.
ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை புகழ்ந்து பேசி தனது கருத்தை பதிய வைக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இப்படி பேசுவதை மானிய கோரிக்கையில் தான் பேச வேண்டும். என்ன முக்கியமான விஷயம் உள்ளதோ அதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை முழுவதும் பேச விடுங்கள். பாதியிலேயே பேச்சை நிறுத்தச் சொன்னால் எப்படி என்றார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச முற்பட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் திடீரென இப்படி பேசினால் அமைச்சரால் பதில் கொடுக்க இயலாது. நீங்கள் நாளை பேசலாம். அனுமதி தருகிறேன் என்றார்.
ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து விளக்கம் அளித்தார்.
ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை புகழ்ந்து பேசி தனது கருத்தை பதிய வைக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இப்படி பேசுவதை மானிய கோரிக்கையில் தான் பேச வேண்டும். என்ன முக்கியமான விஷயம் உள்ளதோ அதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை முழுவதும் பேச விடுங்கள். பாதியிலேயே பேச்சை நிறுத்தச் சொன்னால் எப்படி என்றார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கே.பி.முனுசாமிக்கு தொடர்ந்து பேச அனுமதி கொடுக்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்... ஏழை குடும்பத்தில் இருந்து வந்து 20 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X