என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நம்பிக்கை வரும் வகையில் விசாரணை நடத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்
Byமாலை மலர்7 Sep 2021 7:59 PM GMT (Updated: 7 Sep 2021 7:59 PM GMT)
இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு துணை சூப்பிரண்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அர்ஷத் (வயது32) என்பவர் சொந்த தொழில் செய்வதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை மிரட்டி பறித்து சென்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெறுவதாக அவரது தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வசந்தி கைதான பின், இந்த வழக்கின் நிலை குறித்து தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு துணை சூப்பிரண்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் அரசு ஊழியர். அவரது செயல் அவர் சார்ந்திருக்கும் துறையை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தை பிரதானமாக கொண்டு இந்த வழக்கு விசாரணையை போலீசார் தொடர வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
பின்னர் வசந்தியின் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X