என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்7 Sep 2021 6:21 PM GMT (Updated: 7 Sep 2021 6:21 PM GMT)
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளி ரெங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் உமாபதி. கஞ்சா வியாபாரி. இதே போல் பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் தனபால் (57). சாராய வியாபாரி.
இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து உமாபதி, தனபால் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஆகியோர் உமாபதி, தனபால் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X