search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளி ரெங்கநாதபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் உமாபதி. கஞ்சா வியாபாரி. இதே போல் பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் தனபால் (57). சாராய வியாபாரி.

    இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து உமாபதி, தனபால் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் ஆகியோர் உமாபதி, தனபால் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×