search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட குட்காவையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட குட்காவையும் படத்தில் காணலாம்.

    உடுமலை அருகே 7 கிலோ குட்கா பதுக்கிய வாலிபர் கைது

    டி.எஸ்.பி. தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படையினர் சென்று சோதனை நடத்தினர்.
    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் வேல் நகர் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக டி.எஸ்.பி., தேன்மொழிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து டி.எஸ்.பி. தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீட்டில் 7 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை பதுக்கி வைத்திருந்த செந்தில்குமார் (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போதை பொருட்களை எங்கிருந்து வாங்கினார், யாருக்கு சப்ளை செய்தார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×