
சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த எரிசக்தி துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதய் திட்டத்தால் தமிழக அரசு ரூ.22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும் 31.3.2021 வரை ரூ.1,34,119.94 கோடி கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன் 31.3.2021 வரை ரூ.25568.73 கோடி நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 31.3.2021 வரை ரூ.6782.35 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் ரூ.1778.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.