என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
Byமாலை மலர்6 Sep 2021 10:04 AM GMT
திருத்தணி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சக்திவேல் தனது மாமனார் பெருமாள் (42), நண்பர் விநாயகம் (30) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மெயின் ரோட்டிலிருந்து தனது கிராமத்திற்கு செல்லும் சாலையில் அவர் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள், விநாயகம் ஆகியோர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். விபத்தில் இறந்த சக்திவேலின் மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X