என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் திரவ உயிர் உரம் உற்பத்தி
Byமாலை மலர்6 Sep 2021 8:12 AM GMT (Updated: 6 Sep 2021 8:12 AM GMT)
வேளாண்மை துறை சார்பில் தயாரிக்கப்படும் உயிர் உரம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண் மையத்தில் திட வடிவ உயிர் உர உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கு ரூ.1.30 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த ஜூலை முதல் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவிநாசி உதவி வேளாண் இயக்குனர் அருள்வடிவு, உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் சங்கீதா ஆகியோர் கூறுகையில்:
உலகதரத்தில் தொழில்நுட்ப உதவியுடன் உயிர் உரம் தயாரிக்கப்படுகிறது. நுண்ணீர் மற்றும் சொட்டுநீர் பாசனம் வழியாகவே இந்த உரத்தை செலுத்த முடியும் என்பதால் அவை வீணாகாது. முழு பலன் தரும்.
20 முதல் 40 சதவீதம் வரை மகசூல் கூடுதலாக கிடைக்கும். மண் வளமும் பாதுகாக்கப்படும். உரத்தை ஓராண்டு வைத்து பயன்படுத்தலாம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X