search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே மேலசங்கரன் குழியைச் சேர்ந்தவர் மணி தங்கம். இவரது மகன் ராஜேஷ் (வயது 25), கூலித் தொழிலாளியான இவர் நேற்று இரவு 7 மணி அளவில் பேயோடு சந்திப்பு அருகே சூரப்பள்ளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கன்னியாகுமரி மகாதானபுரத்தை சேர்ந்த கமல் (22), கோயில்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (19) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக கமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ் மீது மோதியது. இதில் ராஜேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சூரப்பள்ளத்தை சேர்ந்த வைகுண்டமணி (58), அருள் லிங்கம் (37) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இவர்கள் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கமல் பின்னாலிருந்த மணிகண்டன் ஆகியோரும் விபத்தில் படுகாயம் அடைந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளிச்சந்தை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் விபத்தில் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேல் விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×