search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூத்துக்குடியில் ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

    தூத்துக்குடியில் ரே‌ஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி, 10 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் மேலக்கரந்தை பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 50 கிலோ எடை கொண்ட ரே‌ஷன் அரிசி மூட்டைகள் 10 இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்தி சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் மினிலாரியை ஓட்டி வந்த அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்களான காணநாதன் மகன் கணேச பாண்டி (வயது 24) மற்றும் கண்ணன் மகன் கார்த்தி (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி, 10 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×