என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது
Byமாலை மலர்3 Sep 2021 11:28 AM GMT (Updated: 3 Sep 2021 11:28 AM GMT)
பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றியவர் கலைச்செல்வி (45), தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், அந்தோணி யாகப்பா இருவரும், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்து 2 வாகனங்களுக்கான ஆர்.சி., புக் 2 ஆயிரம் ரூபாய் என 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பெயரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மறைந்திருந்தனர். அப்போது 4,500 ரூபாய் பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.
அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பட்டுக்கோட்டை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றியவர் கலைச்செல்வி (45), தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், அந்தோணி யாகப்பா இருவரும், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்து 2 வாகனங்களுக்கான ஆர்.சி., புக் 2 ஆயிரம் ரூபாய் என 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பெயரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மறைந்திருந்தனர். அப்போது 4,500 ரூபாய் பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.
அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X