search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாளையில் திருமணம் பிடிக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை

    பாளையில் திருமணம் பிடிக்காததால் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளை தியாகராஜநகரை சேர்ந்தவர் செல்லய்யா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனிதா (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இந்நிலையில் அனிதா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அனிதாவிற்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்க்க தொடங்கியது தெரியவந்தது. ஆனால் மேல்படிப்பு படிக்க உள்ளதால் தற்போது திருமணம் வேண்டாம் என அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×