search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் நகை கடை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை -பணம் கொள்ளை

    மதுரையில் நகை கடை ஊழியர் வீட்டில் இருந்து 25 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 39). நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சேவியரை பிரிந்து அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சேவியர் வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சேவியர் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவரது உறவினரான நெல்சன் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    நெல்சன் அந்த நகைகளை அடகு வைத்து அந்த பணத்தில் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரிப்பதை அறிந்ததும் நெல்சன், அடகு வைத்த நகையை மீட்டு தூத்துக்குடியில் ரூ. 7 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×