search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்க்க நூலகம், திருமண மண்டபங்களிலும் தடுப்பூசி முகாம்

    உடனடியாக தடுப்பூசி செலுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    அனைவரும் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    ஓட்டுச்சாவடி மையங்களான பள்ளிகளில் மட்டுமே முகாம் நடந்த வந்த நிலையில் தற்போது நூலகம், திருமண மண்டபங்களிலும் தற்போது முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்:

    தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களுக்கு கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், 65 வயதை கடந்தவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர் சென்றால் காத்திருக்க வேண்டியதில்லை. 

    உடனடியாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
    Next Story
    ×