என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை- ஐகோர்ட் தீர்ப்பு
Byமாலை மலர்3 Sep 2021 10:01 AM GMT (Updated: 3 Sep 2021 11:23 AM GMT)
2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என ஐகோர்ட் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணாக தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை. இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை. அதனால் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ‘1998ம் ஆண்டு ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என ஐகோர்ட் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணாக தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை. இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை. அதனால் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்... அரியலூரில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X