என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஏரி 80 சதவீதம் நிரம்பியது
Byமாலை மலர்3 Sep 2021 9:55 AM GMT (Updated: 3 Sep 2021 9:55 AM GMT)
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி வரும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு மற்றும் பேபி கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.
மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் உயரம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.16 அடி ஆக பதிவாகின.
2568 மில்லியன் கன அடி (2.568 டி.எம். சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதமாகும். கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் இன்று காலை வரை 79 நாட்களில் பூண்டி ஏரிக்கு 4. 078 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 578 கனஅடியாக வந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் மழைநீர் வினாடிக்கு 328 கனஅடி வீதம் வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 328 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத் துக்கு விநாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி வரும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு நேற்று நள்ளிரவு வந்தடைந்தது.
ஏரிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அம்மப்பள்ளி அணையில் இருந்து நேற்று முன்தினம் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு மற்றும் பேபி கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.
மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் உயரம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.16 அடி ஆக பதிவாகின.
2568 மில்லியன் கன அடி (2.568 டி.எம். சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதமாகும். கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் இன்று காலை வரை 79 நாட்களில் பூண்டி ஏரிக்கு 4. 078 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 578 கனஅடியாக வந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் மழைநீர் வினாடிக்கு 328 கனஅடி வீதம் வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 328 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத் துக்கு விநாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி வரும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு நேற்று நள்ளிரவு வந்தடைந்தது.
ஏரிக்கு 198 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அம்மப்பள்ளி அணையில் இருந்து நேற்று முன்தினம் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X