search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாதிப்புகளை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த சிறப்பு செயல்திட்டம் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    விளைநிலங்களில் பார்த்தீனிய செடியை கட்டுப்படுத்த விவசாயிகள் குறிப்பிட்ட இடைவெளியில் களைக்கொல்லி தெளிக்கின்றனர்.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் விளைநிலங்கள், தரிசு நிலங்கள், ரோட்டோரங்கள், குடியிருப்பு வீதிகளில் முக்கிய பிரச்சினையாக பார்த்தீனியம் செடிகள் உருவெடுத்துள்ளது. மழை நீர் ஓடைகள் தெரியாத அளவுக்கு இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளது.

    பார்த்தீனிய செடியில் ஒவ்வொரு பூங்கொத்திலும் நான்கு விதைகள் காணப்படும். இவ்விதைகள் நான்கே வாரத்திற்குள் நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். மழை, வறட்சி என அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் இச்செடி தாங்கி வளரும் தன்மையுடையதாகும்.

    இச்செடிகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விளைநிலங்களில் பார்த்தீனிய செடியை கட்டுப்படுத்த விவசாயிகள் குறிப்பிட்ட இடைவெளியில் களைக்கொல்லி தெளிக்கின்றனர்.

    ஆனால் குடியிருப்புகள் மற்றும் பொது இடங்கள், மழை நீர் ஓடைகளில் ஆக்கிரமித்துள்ள இச்செடிகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் அவற்றின் பரவல் ஒவ்வொரு மழை சீசனிலும் அதிகரித்து வருகிறது.

    தற்போதும் இந்த செடிகளின் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமங்களில் பொது இடங்கள் மற்றும் மழைநீர் ஓடைகளில் பார்த்தீனிய செடிகளை அகற்றி இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். 

    இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தீனிய களை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கிராமம் வாரியாக நடத்தப்பட்டது. அத்தகைய முகாம்களை வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கும் முன் நடத்தினால் பார்த்தீனியம் பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
    Next Story
    ×