என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பி.எஸ். துக்க வீட்டுக்கு வந்தவர்களின் கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்
Byமாலை மலர்2 Sep 2021 11:11 AM GMT (Updated: 2 Sep 2021 11:11 AM GMT)
திண்டுக்கல் அருகே ஓ.பி.எஸ். துக்க வீட்டுக்கு வந்தவர்களின் கார் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
செம்பட்டி:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் இன்று பெரியகுளத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் வந்தனர்.
காரை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். காரில் குத்தாலத்தைச் சேர்ந்த ராஜாராம் (51), கோபால் (58), தன்ராஜ் (43) ஆகியோரும் வந்தனர்.
கார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. சுதனாகியபுரம் பகுதியில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனே காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் செம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் கார் முற்றிலும் எரிந்து தீயில் கருகியது. படுகாயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் இன்று பெரியகுளத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் வந்தனர்.
காரை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். காரில் குத்தாலத்தைச் சேர்ந்த ராஜாராம் (51), கோபால் (58), தன்ராஜ் (43) ஆகியோரும் வந்தனர்.
கார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. சுதனாகியபுரம் பகுதியில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனே காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் செம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் கார் முற்றிலும் எரிந்து தீயில் கருகியது. படுகாயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X