என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி-தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்2 Sep 2021 10:27 AM GMT (Updated: 2 Sep 2021 10:27 AM GMT)
திருமங்கலம், செல்லூரில் விவசாயி மற்றும் தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமம் டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 2 ஆயிரம் ரொக்கம், கிரெடிட் கார்டு, சி.சி.டி.வி. கேமரா 2, எல்.இ.டி. பல்பு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் அய்யனார் காலனி தெருவை சேர்ந்தவர் சின்ன பாண்டியராஜன் (வயது 42). மண்பாண்ட தொழிலாளி.
சின்ன பாண்டியராஜன் சம்பவத்தன்று இரவு தூங்கும் முன்பாக முன்கதவை பூட்ட மறந்து விட்டார்.
அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக சின்ன பாண்டியராஜன் செல்லூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமம் டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 2 ஆயிரம் ரொக்கம், கிரெடிட் கார்டு, சி.சி.டி.வி. கேமரா 2, எல்.இ.டி. பல்பு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் அய்யனார் காலனி தெருவை சேர்ந்தவர் சின்ன பாண்டியராஜன் (வயது 42). மண்பாண்ட தொழிலாளி.
சின்ன பாண்டியராஜன் சம்பவத்தன்று இரவு தூங்கும் முன்பாக முன்கதவை பூட்ட மறந்து விட்டார்.
அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக சின்ன பாண்டியராஜன் செல்லூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X