என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊராட்சிகளில் வரி வசூல் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்2 Sep 2021 8:46 AM GMT (Updated: 2 Sep 2021 8:46 AM GMT)
வீடு, தொழில், கல்வி நிறுவனம், குடிநீர் உள்ளிட்ட வரி இனங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
உடுமலை:
உடுமலை ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. வீடு, தொழில், கல்வி நிறுவனம், குடிநீர் உள்ளிட்ட வரி இனங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக பலரும் வரி இனங்களை முறையாக செலுத்தவில்லை. வரி வசூல் நிலுவை காரணமாக பல ஊராட்சிகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஊராட்சிகளில் வரி வசூல் செய்ய ஊராட்சி செயலாளர் தலைமையிலான குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வீடு வீடாக செல்லும் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்கியும் வருகின்றனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., ரொனால்ட் செல்டன் கூறுகையில்:
கொரோனா பாதிப்பு காரணமாக ஊராட்சிகளில் வரி இனங்கள் செலுத்த காலஅவகாசம் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வரி வசூலில் முனைப்பு காட்டப்படுகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X