search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.56 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

    158 விவசாயிகள் 60 ஆயிரத்து 257 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    158 விவசாயிகள் 60 ஆயிரத்து 257 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

    இதில் வெள்ளகோவில், மூலனூர், முத்தூர், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.103.65க்கும், குறைந்தபட்சம் ரூ.70க்கும் கொள்முதல் செய்தனர். விற்பனை கூடத்தில் மொத்தம் ரூ.56 லட்சத்து 24 ஆயிரத்து 435க்கு வணிகம் நடைபெற்றது.
    Next Story
    ×