என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்சி பொறுப்பேற்று 116 நாளில் 2.60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்
Byமாலை மலர்1 Sep 2021 9:34 AM GMT (Updated: 1 Sep 2021 10:36 AM GMT)
தமிழகத்தில் 1,450 கலை அறிவியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் படிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் தடுப்பூசி தேவையை அறிந்து மத்திய அரசிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக பெற்று வருகிறார். இதுவரையில் 3 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 313 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து மாணவர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. வகுப்பறையிலும் இந்த ஆய்வு நடக்கிறது.
தமிழகத்தில் 1,450 கலை அறிவியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 587 பொறியியல் கல்லூரிகளில் 4.25 லட்சம் மாணவர்களும், பாலிடெக்னிக்கில் 2.50 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள்.
ஏறத்தாழ 18 லட்சம் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த ஆட்சியில் 61 நாட்களில் 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று 116 நாளில் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்களை விட 2 மடங்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் தடுப்பூசி தேவையை அறிந்து மத்திய அரசிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக பெற்று வருகிறார். இதுவரையில் 3 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 313 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 122 கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க விரைவுபடுத்தப்படும். மாணவர் சேர்க்கையின் போதே லயோலா கல்லூரியில் கொரோனா தடுப்பூசி விதிமுறை சொல்லி தரப்படுகின்றது.
தமிழகத்தில் 1,450 கலை அறிவியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 587 பொறியியல் கல்லூரிகளில் 4.25 லட்சம் மாணவர்களும், பாலிடெக்னிக்கில் 2.50 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள்.
ஏறத்தாழ 18 லட்சம் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த ஆட்சியில் 61 நாட்களில் 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று 116 நாளில் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்களை விட 2 மடங்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எழிலன் எம்.எல்.ஏ., துணை கமிஷனர்கள் விஷூ மகாஜன், ஷரண்யா அரி, சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், லயோலா கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... பாம்பு விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து - பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X