search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடை உரிமையாளர் வீட்டில் கைவரிசை - ரூ.7½ லட்சம் கொள்ளையில் அலுவலக ஊழியர் சிக்கினார்

    நெல்லை அருகே கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அலுவலக ஊழியர் சிக்கியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரை சேர்ந்தவர் சங்கரவேலு. இவரது மகன் சுரேஷ்குமார் (27). இவர் பாளை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று கடையின் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர்அளித்த புகாரின் பேரில் பாளை குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அதில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.அவரை பிடித்து விசாரித்ததில், அலுவலகத்தில் தினமும் பணம் இருக்கும் இடம் ஊழியருக்கு தெரிந்து உள்ளது.

    அதனை கொள்ளையடிக்க திட்டமிட்ட அவர் சென்னையை சேர்ந்த தனது நண்பரை வரவழைத்துள்ளார்.

    அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7½ லட்சம் பணத்தையும் தனது நண்பரிடம் எடுத்து கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

    இதையடுத்து அலுவலக ஊழியரின் நண்பரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    Next Story
    ×