என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் செல்வதால் தோகைமலை பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம்
Byமாலை மலர்31 Aug 2021 2:53 PM GMT (Updated: 31 Aug 2021 2:53 PM GMT)
தோகைமலை பகுதிகளில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோகைமலை:
தமிழகத்தில் அதிவேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்தநிலையில், தோகைமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் நோய் தொற்று இருப்பவர்கள் யார்? என்றும் தெரியாமலும் இருந்து வருகிறது.
தோகைமலை பகுதிகளில் அதிகளவில் சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர்.
எனவே சுகாதாரத்துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X