என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னூர் அருகே கட்டிட தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
Byமாலை மலர்29 Aug 2021 10:25 AM GMT (Updated: 29 Aug 2021 10:25 AM GMT)
கோவை அன்னூர் அருகே கட்டிட தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அன்னூர் பொன்னிகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் இவான்செல்லி(வயது 52). கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்று கோவைக்கு வந்தார்.
வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து இவான்செல்லி அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை அன்னூர் பொன்னிகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் இவான்செல்லி(வயது 52). கட்டிட தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்று கோவைக்கு வந்தார்.
வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து இவான்செல்லி அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X