search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆன்லைன் மூலம் கனடா ஆயத்த ஆடை கண்காட்சி -ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அழைப்பு

    கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    திருப்பூர்:

    கனடா நாட்டின் பிரசித்திபெற்ற ‘அப்பேரல் டெக்ஸ்டைல் சோர்சிங் கனடா’ கண்காட்சி ஆன்லைன் மூலம் வருகிற 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. 

    இதில் திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களை அதிகளவில் பங்கேற்க செய்ய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.

    கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண்காட்சி கட்டணம் ரூ.37,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் விவரங்களுக்கு 0421 2232634 என்கிற எண்ணில் ஏ.இ.பி.சி.,ன் திருப்பூர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் www.aepcindia.com என்கிற இணையதளத்தை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சி மூலம் கனடாவில் இருந்து ஆடை ஆர்டர்களை திருப்பூர் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×