search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அம்பை அருகே கணவன்-மனைவியை தாக்கிய வாலிபர் கைது

    அம்பை அருகே முன்விரோத காரணமாக கணவன், மனைவியை தாக்கியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    தென்காசி:

    அம்பை துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிகண்ணன் (29), என்பவரும், அம்பை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், என்பவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

    தற்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் காளிகண்ணனின் மனைவி தனலட்சுமி (23), அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், பிரம்ம தேசத்தைச் சேர்ந்த ரவி (47), மணி மற்றும் மணி என்ற டோரா மணி ஆகிய 4 பேர், தனலெட்சுமியை அவதூறாக பேசினர்.

    சத்தம் கேட்டு வந்த காளிகண்ணனை சரமாரியாக தாக்கினர். கம்பாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனலட்சுமி அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சைமன் சாம் விசாரணை மேற்கொண்டு காளி கண்ணனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசிய ரவி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×