என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்28 Aug 2021 10:23 AM GMT (Updated: 28 Aug 2021 10:23 AM GMT)
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த தைலாபுரத்தை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்திற்கு தனது தந்தை ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை (வயது 59) அணுகினார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கறாராக கூறியுள்ளார். இதுகுறித்து உத்திரகுமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 25-ந் தேதி ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜூவிடம் கொடுத்தார். அந்த பணத்தை ராஜூ வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த தைலாபுரத்தை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்திற்கு தனது தந்தை ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை (வயது 59) அணுகினார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கறாராக கூறியுள்ளார். இதுகுறித்து உத்திரகுமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 25-ந் தேதி ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜூவிடம் கொடுத்தார். அந்த பணத்தை ராஜூ வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X