search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

    மதுரையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செக்கானூரணி திருமண விழாவுக்காக புறப்பட்டுச் சென்றார்.

    செல்லம்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்கள் மதுரை-தேனி ரோட்டில் சென்றபோது சுரேஷ் மனைவி அணிந்திருந்த 7 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக சுரேஷ் செக்கனூரணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×