என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் வீட்டின் கதவை திறந்து 10½ பவுன் நகைகள் கொள்ளை
Byமாலை மலர்27 Aug 2021 11:30 AM GMT (Updated: 27 Aug 2021 11:30 AM GMT)
கோவையில் வங்கிக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய 2 மணிநேரத்தில் 10½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி கற்பகம் (வயது 48). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் அருகே மறைத்து வைத்து விட்டு வங்கிக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 10½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
2 மணி நேரத்துக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய கற்பகம் வீட்டில் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து கற்பகம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து 2 மணி நேரத்தில் 10½ நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி கற்பகம் (வயது 48). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் அருகே மறைத்து வைத்து விட்டு வங்கிக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 10½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
2 மணி நேரத்துக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய கற்பகம் வீட்டில் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து கற்பகம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து 2 மணி நேரத்தில் 10½ நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X