search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று 1559 பேருக்கு கொரோனா பாதிப்பு, 26 பேர் உயிரிழப்பு

    தமிழகம் முழுவதும் இன்று 1816 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து, 7 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துளள்து. 

    இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த உயிரிழப்பு 34814 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 1816 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. 18069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    சென்னையில் இன்று 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 216 பேருக்கும், ஈரோட்டில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×