search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    இந்த பணியில் உள்ளவர்கள் கையுறை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் -ஐகோர்ட் உத்தரவு

    பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உணவு விநியோகம் செய்வோர், பார்சல் பேப்பர்கள், கவர்களை பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும், வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×