search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து நீடாமங்கலத்தில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நீடாமங்கலம்:

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார்.

    இதில் மாநில தலைவர் கலைச்செல்வி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மணிமேகலை, இல்லிஸ்மேரி, கண்மணி, கீர்த்தனா, குமாரி, சுகன்யா, தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கியாஸ் வலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×