search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    நாளை (27-ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

    வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசைக்காற்று வலுவடைவதன் காரணமாக 28-ந்தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

    29-ந் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் கன முதல் அதிகனமழையும், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    மழை

    30-ந் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் அதிகனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×