search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள்
    X
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள்

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றகோரி காணிக்கை செலுத்துகின்றனர்.
    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றகோரி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் 9 தட்டு காணிக்கை மற்றும் 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    உண்டியல்களை மாதந்தோறும் திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, உதவி ஆணையர் (சரிபார்ப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வளாகத்தில் இருந்த தட்டு காணிக்கை மற்றும் நிரந்தர உண்டியல்கள் எண்ணப்பட்டன.

    தட்டு காணிக்கை மூலம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 132, நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.20 லட்சத்து 33 ஆயிரத்து 440 சேர்த்து மொத்தம் ரூ.23 லட்சத்து 97 ஆயிரத்து 572 வருமானமாக கிடைத்தது.

    இதை தவிர 138 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தன. இதில் கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், ஆய்வாளர் அருண் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×