என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது
Byமாலை மலர்25 Aug 2021 10:24 AM GMT (Updated: 25 Aug 2021 10:24 AM GMT)
கோவை மாநகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை:
தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் ஆர். எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, ராமநாதபுரம், போத்தனூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X