search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ரெயில் முன் பாய்ந்து துப்புரவு தொழிலாளி தற்கொலை

    ரெயில் முன் பாய்ந்து துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×