என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
Byமாலை மலர்25 Aug 2021 7:47 AM GMT (Updated: 25 Aug 2021 7:47 AM GMT)
கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து சம்பா அறுவடை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக மக்களுக்கு வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவாரூரில் இருந்து ஓசூருக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து சம்பா அறுவடை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக மக்களுக்கு வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவாரூரில் இருந்து ஓசூருக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X