search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றியபோது எடுத்த படம்.
    X
    நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றியபோது எடுத்த படம்.

    திருவாரூரில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

    கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து சம்பா அறுவடை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக மக்களுக்கு வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருவாரூரில் இருந்து ஓசூருக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.
    Next Story
    ×