என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்திய வாலிபர் கைது
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கொடிமரம் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது20).இவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்கர் ஆசை வார்த்தை கூறி மாணவியை வெளியூருக்கு கடத்தி சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பாளையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரையும், மாணவியையும் தேடி வந்தனர். இந்த நிலையில் பாஸ்கர் மாணவியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவந்திபட்டி அருகே உள்ள குத்துக்கல்லை சேர்ந்தவர் ஆனந்த் (வயது21). இவர் பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆனந்தை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்