search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மசாஜ் சென்டர்களில் விபசாரம் - 3 பேர் கைது

    திருப்பூர் பி.என்.ரோடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய போது அங்கு வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் மசாஜ் சென்டர்கள் பெயரில் விபசாரம் நடப்பதாக  திருப்பூர் வடக்கு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேசன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் 2 குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.  

    திருப்பூர் பி.என்.ரோடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய போது அங்கு வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடகா, ஒடிசாவை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர். மேலும் விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ஜோதிரெட்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

    இதேப்போல் கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய போது அங்கு ஜெயலட்சுமி (22) என்பவர் 4 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெய லட்சுமியை போலீசார் கைது செய்ததுடன் 4 பெண் களையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
    Next Story
    ×