search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூலனூரில் ஆடு திருடிய வாலிபர் கைது

    விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குளத்துப்பட்டி பகுதியைச்சேர்ந்த பாரதி தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடிச்சென்றது தெரியவந்தது.
    மூலனூர்,:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாங்காலிவலசு பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மனைவி பூங்கொடி. இவர் சம்பவத்தன்று மதியம் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துவிட்டு ஆரம்ப பள்ளிகூடம் அருகில் கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றார். 

    பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து பார்த்தபோது கட்டியிருந்த ஆடுகளில் ஒருஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மூலனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் பாரதி(21) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டைதிருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×