search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

    இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பால் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் மீன்பிடிக்க விடாமல் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பால் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.

    ஏற்கனவே கச்சத்தீவு அருகே நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மோதியது. இதில் அந்த படகு பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் இருந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரைக்கு திரும்பினார்கள்.
    Next Story
    ×