என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தியேட்டர்களை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்22 Aug 2021 1:00 PM GMT (Updated: 22 Aug 2021 1:00 PM GMT)
தியேட்டர்களில் வேலை பார்க்கும் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
திருப்பூர்:
கொரோனா ஊரடங்கு தளர்வில் நாளை (23-ந்தேதி) திங்கட்கிழமை முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் ஒவ்வொரு இருக்கையையும் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கேண்டீன்களும் தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றன.50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதால் ஒரு இருக்கை இடை வெளிவிட்டு அமரும் வகையில் தியேட்டரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தியேட்டர்களில் வேலை பார்க்கும் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கி உள்ளதால் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி விடுமுறையில் இருந்த ஊழியர்களை வரவழைத்து இன்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X